UPDATED : ஜூன் 11, 2026 04:33 PM
ADDED : ஜூன் 11, 2026 04:35 PM
கோவை:
மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சிறுபான்மையினர் நலத்துறை மாணவர், மாணவியர் விடுதிகளில் சேர தகுதியுள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மசக்காளிப்பாளையம் மற்றும் சுந்தராபுரத்தில் உள்ள விடுதிகளில் பட்டப்படிப்பு, முதுநிலை, ஐ.டி.ஐ., மற்றும் பாலிடெக்னிக் படிக்கும் மாணவர்கள் சேரலாம். இங்கு தங்கும் வசதி மற்றும் மூன்று வேளை உணவு இலவசம்.
பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.2 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். மாணவர்களின் இருப்பிடத்திலிருந்து கல்வி நிலையம் குறைந்தபட்சம் 8 கி.மீ., தொலைவில் இருக்க வேண்டும். இந்த நிபந்தனை மாணவியருக்கு பொருந்தாது.
விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட விடுதிகள் அல்லது மாவட்ட சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று, பூர்த்தி செய்து ஜூலை 15க்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
