UPDATED : மார் 26, 2026 06:46 PM
ADDED : மார் 26, 2026 06:47 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெங்கவல்லி:
சேலம் மாவட்டம் தம்மம்பட்டி அரசு பொது நூலகம், 1961, மார்ச் 25ல், தொடங்கப்பட்டது. 65 ஆண்டு கடந்த இந்த நூலகத்தில், 48,000 புத்தகங்கள், 130 புரவலர்கள், 6,900 உறுப்பினர்கள் உள்ளனர். தினமும், 50க்கும் மேற்பட்டோர் வந்து படித்து செல்கின்றனர்.
நேற்று, 65 ஆண்டு நிறைவு பெற்றது. இதனால், 66ம் ஆண்டு தொடக்க விழா, தம்மம்பட்டி மக்கள் குழு, நண்பர் குழு, ஊர்மக்கள் சார்பில் நடந்தது. அப்போது நூலகத்துக்கு புது நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன.
தி.மு.க., பேரூர் பொறுப்பாளர் சண்முகம், காங்., மாவட்ட துணைத் தலைவர் திருச்செல்வன், டவுன் பஞ்சாயத்து துணைத்தலைவர் சந்தியா, கவுன்சிலர்கள், புரவலர்கள் பங்கேற்றனர்.

