sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கட்டி முடித்து 8 மாதமாச்சு ஆபீசர்ஸ்! அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது?

/

கட்டி முடித்து 8 மாதமாச்சு ஆபீசர்ஸ்! அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது?

கட்டி முடித்து 8 மாதமாச்சு ஆபீசர்ஸ்! அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது?

கட்டி முடித்து 8 மாதமாச்சு ஆபீசர்ஸ்! அங்கன்வாடி மையம் திறப்பது எப்போது?


UPDATED : டிச 10, 2024 12:00 AM

ADDED : டிச 10, 2024 10:15 AM

Google News

UPDATED : டிச 10, 2024 12:00 AM ADDED : டிச 10, 2024 10:15 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாலாஜாபாத்:
வாலாஜாபாத் ஒன்றியம், பழையசீவரம் ஊராட்சிக்கு உட்பட்டது லிங்காபுரம் கிராமம். இக்கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில், 20 குழந்தைகள் பயின்று வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி மையத்திற்கான கட்டடம் மிகவும் பழுதடைந்ததை அடுத்து, இக்கட்டடம் பயன்பாட்டில் இருந்து கைவிடப்பட்டது. இதையடுத்து, லிங்காபுரம் அடுத்த நல்லூரில் உள்ள அங்கன்வாடி மையத்தில், தற்போது இப்பகுதி குழந்தைகள் பயில்கின்றனர்.

இதனிடையே, லிங்காபுரத்தில் பயன்பாடு இல்லாத பழைய கட்டடத்தை இடித்து அப்புறப்படுத்திவிட்டு, அதே இடத்தில் ஊராட்சி கனிமவள நிதியின் கீழ், 13.57 லட்சம் ரூபாய் செலவில் புதிய அங்கன்வாடி மையம் கட்டப்பட்டது.

இந்த கட்டட பணி நிறைவடைந்து, எட்டு மாதங்களை கடந்தும் பயன்பாட்டுக்கு வராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால், லிங்காபுரம் கிராம குழந்தைகள், 1 கி.மீ., தூரத்தில் உள்ள நல்லூர் பகுதி அங்கன்வாடி மையத்திற்கு செல்லும் நிலை தொடர்கிறது.

எனவே, லிங்காபுரத்தில் உள்ள புதிய அங்கன்வாடி மையத்தை திறந்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






      Dinamalar
      Follow us