ஜவகர்லால் நேரு பல்கலை.யில் மராத்தி மொழி இருக்கைக்கு ரூ.1.5 கோடி
ஜவகர்லால் நேரு பல்கலை.யில் மராத்தி மொழி இருக்கைக்கு ரூ.1.5 கோடி
UPDATED : செப் 24, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
இதற்காக மகாராஷ்டிர மாநில அரசு ரூ.1.5 கோடி வழங்குகிறது. இதற்கான அரசாணையைம் மகாராஷ்டிர மாநில அரசு பிறப்பித்துள்ளது.
மராத்தி மொழிக்கான இந்த புதிய இருக்கை இந்திய மொழிகளுக்கான மையத்தில் அமைக்கப்படும்.
மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அறிவியல் பேராசிரியர் காலே முயற்சியால் இந்த மையம் உருவாக்கப்படுகிறது. அறிவியல் துறையைச் சேர்ந்தவர் என்றாலும்கூட, தனது தாய்மொழியான மராத்தி மொழியின் மீதுள்ள பற்று காரணமாக இதற்கான முயற்சியை மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இருக்கைக்கு சிறந்த ஒருவர் இந்த இருக்கைக்குப் பேராசிரியராக நியமிக்கப்படுவார். அடுத்த ஆண்டு ஜூலை முதல் இந்த புதிய இருக்கை செயல்படத் தொடங்கும் என்று தெரிகிறது.
