UPDATED : ஆக 06, 2009 12:00 AM
ADDED : ஆக 06, 2009 02:06 PM
அ நிறம் | அளவு
இதேபோல பதிவாளர், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி போன்ற முக்கியப் பொறுப்புகளுக்கான இடங்களுக்கும் யாரும் நியமிக்கப்படாததால் மாணவர்கள் கடும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர்.
கடலூர் கந்தசாமி நாயுடு மகளிர் கல்லூரியில் முதல் செமஸ்டர் எழுதிய மாணவிகளுக்கு மூன்றாவது செமஸ்டரில்தான் மதிப்பெண் சான்றிதழ்கள் கிடைத்தன. ஆனால் அக மதிப்பீடு மதிப்பெண்கள் அதில் குறிப்பிடப்பிடப்படவில்லை. விலங்கியல், தாவரவியல் பாடப்பிரிவுகளிலும் தமிழ், ஆங்கிலம், கணிதம் போன்ற பாடப்பிரிவுகளிலும் நன்றாகப் படிக்கக்கூடிய பல மாணவிகள் தோல்வியடைந்துள்ளனர். இதுகுறித்து பல்கலைக்கழக நிர்வாகத்திற்குத் தெரிவித்தும்கூட எந்த பதிலும் கிடைக்கவில்லை என்று அந்தக் கல்லூரி தரப்பில் கூறப்படுகிறது.
