ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு: பனாரஸ் இந்து பல்கலை முதலிடம்!
ஆய்வுக் கட்டுரைகள் வெளியீடு: பனாரஸ் இந்து பல்கலை முதலிடம்!
UPDATED : அக் 08, 2009 12:00 AM
ADDED : அக் 08, 2009 05:30 PM
இத்தகவலை கரண்ட் சயின்ஸ் ஆய்விதழ் வெளியிட்டுள்ளது.
1999ம் ஆண்டிலிருந்து 2008ம் ஆண்டு வரையிலான பத்தாண்டு காலத்தில் நாட்டில் உள்ள 25 ஆய்வுப் பல்கலைக்கழகங்களில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் முதலிடம் பெற்றுள்ளது. 2004ம் ஆண்டில் 10வது இடத்தில் இருந்த பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் தற்போது முதலிடத்தைப் பெற்றுள்ளது.
ஐதராபாத் பல்கலைக்கழகம், டில்லி பல்கலைக்கழகம், ஜாதவ்பூர் பல்கலைக்கழகம், பஞ்சாப் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்களும் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளதில் முன்னணியில் இருப்பதாகச்
சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எட்டாவது திட்ட காலத்தில் 283.76 கோடி அளவுக்கு பல்கலைக்கழக மானியக் குழு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதுதவிர, ஒ.பி.சி.,க்கான இடங்களை ஒதுக்கீடு செய்வதற்காக கூடுதல் இடங்களை உருவாக்குவதற்கு ரூ.561.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
