மத்திய அமைச்சர் கபில் சிபலைச் சந்திக்கிறார்கள் ஐ.ஐ.எம்., இயக்குநர்கள்
மத்திய அமைச்சர் கபில் சிபலைச் சந்திக்கிறார்கள் ஐ.ஐ.எம்., இயக்குநர்கள்
UPDATED : அக் 13, 2009 12:00 AM
ADDED : அக் 13, 2009 05:49 PM
ஆர்.சி., பார்கவா கமிட்டி அறிக்கையை செயல்படுத்துவது குறித்து அவர்கள் அமைச்சருடன் அக்டோபர் 16ம் தேதி சந்திக்க உள்ளதாகத் தெரிகிறது. ஐ.ஐ.எம்.,,களுக்குத் தன்னாட்சி, எதிர்கால வளர்ச்சி உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்படும். வெளிநாடுகளில் ஐ.ஐ.எம்., கல்வி நிறுவனங்களைத் தொடங்குவது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
மக்கள் பணத்தில் அரசு நடத்தும் ஐ.ஐ.எம்., போன்ற கல்வி நிறுவனங்களை முழுமையாக தன்னாட்சி மிக்கதாக ஆக்க முடியாது. என்று பார்கவா குழு தனது அறிக்கையில் கூறியுள்ளது. இதே பிரச்சினை குறித்து விவாதிப்பதற்கான கூட்டம் கடந்த மே மாதம் நடைபெற்றது. பார்கவா கமிட்டி அறிக்கையைச் செயல்படுத்துவதற்கு ஐ.ஐ.எம்., இயக்குநர்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். இந்த சூழ்நிலையில், இப்பிரச்சினை குறித்து தொடர்ந்து விவாதிக்கப்பட உள்ளது.
