பிளஸ் டூ தேர்வு: மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி
பிளஸ் டூ தேர்வு: மாணவர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி
UPDATED : அக் 15, 2009 12:00 AM
ADDED : அக் 15, 2009 03:11 PM
அ நிறம் | அளவு
தமிழகம் முழுவதும் மார்ச் 2010ல் நடைபெற உள்ள பிளஸ் டூ பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியலை தயாரிக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.
இதன்படி, செப்டம்பர் 23ல் இருந்து இந்தப் பணிகள் நடந்து வருகின்றன. கல்வி மாவட்ட அளவில் பள்ளிகள் பிரிக்கப்பட்டு தனி மையங்கள் அமைக்கப்பட்டு தலைமை ஆசிரியர்களை கொண்ட குழுவினர் மாணவர் பட்டியலை தயாரித்து வருகின்றனர்.
தற்போது இந்த பெயர் பட்டியல் தயாரிப்பு பணிகளை அக்டோபர் 23க்குல் முடித்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநருக்கு அனுப்பி வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் 2010 மார்ச் மாதத்தில் பிளஸ் டூ தேர்வு எழுதப் போகும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
