sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 22, 2025 ,கார்த்திகை 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டிசம்பர் 4ல் விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-16 வகை செயற்கை கோள்

/

டிசம்பர் 4ல் விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-16 வகை செயற்கை கோள்

டிசம்பர் 4ல் விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-16 வகை செயற்கை கோள்

டிசம்பர் 4ல் விண்ணில் ஏவப்படுகிறது ஜிசாட்-16 வகை செயற்கை கோள்


UPDATED : அக் 30, 2014 12:00 AM

ADDED : அக் 30, 2014 12:57 PM

Google News

UPDATED : அக் 30, 2014 12:00 AM ADDED : அக் 30, 2014 12:57 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: தொலைக்காட்சி ஒளிபரப்பு மற்றும் விமான போக்குவரத்திற்கு உதவும் வகையிலான செயற்கைகோள் வரும் டிசம்பர் மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இது குறித்து இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தின் செயற்கை கோள் மையத்தின் இயக்குனர் சிவக்குமார் கூறியதாவது: பல்வேறு தொலை தொடர்பு வசதிகளை அதிகரிக்கும் விதமாக ஜிசாட்-16 வகை செயற்கை கோள் வரும் டிசம்பர் மாதம் 4-ம் தேதி தென்அமெரிக்காவின் பிரெஞ்சு கயானாவில் உள்ள ராக்கெட் ஏவுதளம் மூலம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கை கோளில் 24 சி பேண்டுகள், 12 கியூ பேண்டுகள், மற்றும் 12 விரிவாக்கப்பட்ட சி பேண்டுகள் கொண்ட 48 டிரான்ஸ்பாண்டர்களை கொண்டுளளது. இதன் மொத்த எடை 3.1 டன்னாகும். இதன் மூலம் அரசு மற்றும் தனியார் துறையினர் அளித்தது வரும் தொலை தொடர்பு சேவையில் முக்கிய பங்கு வகிக்க உள்ளது.

தற்போது விண்ணில் செலுத்த உள்ள இந்த ஜிசாட் -16 செயற்கை கோளின் ஆயுட் காலம் 12 ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்சாட் 3-இ செயற்கை கோளுக்கு மாற்றாக இது கருதப்படுகிறது. இன்சாட் 3-சி செயற்கை கோளின் ஆயுட்காலம் ஏப்ரல் மாதத்துடன் முடிவடைந்து விட்டது எனவும், இன்சாட் 3-சி இதே விண்வெளி தளத்தில் இருந்து ஏரியன் 5-ஜி ராக்கெட் மூலம் கடந்த 2003-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜிசாட் -16 செயற்கை கோள் 865 கோடி ரூபாய் அளவிற்கு காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இன்சாட், ஜிசாட் செயற்கை கோள் மூலம் விண்ணில் நிலை நிறுத்தப்பட்டுள்ள சி பாண்ட் கியூ பாண்டு, மற்றும் மேம்படுத்தப்பட்ட சி பாண்டு என மொத்தம் 168 டிரான்ஸ்பாண்டர்கள் தொலை தொடர்பு, தொலைகாட்சி ஒளிபரப்பு, வானிலை முன்னறிவிப்பு, பேரிர் மேலாண்மை போன்றவற்றில் துணைபுரிந்து வருகிறது.

கடந்த ஜனவரி மாதம் 5-ம் தேதி ஆந்திராவின் ஸ்ரீஹரி கோட்டா விண்வெளி மையத்தில் இருந்து செலுத்தப்பட்ட ஜிசாட்-14 வகை செயற்கை கோளில் பொருத்தப்பட்ட ஆறு சி பாண்டு மற்றும் கியூபாண்டு டிரான்ஸ்பாண்டர்கள் டெலிமெடிசன் மற்றும் கல்வி சேவையில் முக்கிய பங்காற்றி வருவதாக அவர் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us