sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழகத்தில் 4000 நிரந்தர பேராசிரியர்கள் ஜூனில் நியமனம்: கோவி செழியன்

/

தமிழகத்தில் 4000 நிரந்தர பேராசிரியர்கள் ஜூனில் நியமனம்: கோவி செழியன்

தமிழகத்தில் 4000 நிரந்தர பேராசிரியர்கள் ஜூனில் நியமனம்: கோவி செழியன்

தமிழகத்தில் 4000 நிரந்தர பேராசிரியர்கள் ஜூனில் நியமனம்: கோவி செழியன்


UPDATED : மார் 08, 2025 12:00 AM

ADDED : மார் 08, 2025 09:15 AM

Google News

UPDATED : மார் 08, 2025 12:00 AM ADDED : மார் 08, 2025 09:15 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
தமிழகத்தில், 4000 நிரந்தர பேராசிரியர்கள் வரும் ஜூனில் நியமிக்கப்பட உள்ளனர் என உயர் கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்தார்.

ஈரோட்டில் உள்ள சி.என்.கல்லுாரியில் ஆய்வு செய்த அவர் கூறியதாவது:

ஈரோடு, சி.என்.கல்லுாரியில், முதல்வர் அறிவித்தபடி விளையாட்டு அரங்கம், நவீன நுாலகம், ஐ.ஏ.எஸ்., அகாடமி விரைவில் ஏற்படுத்த வரைவுப்படத்தை பெற்றுள்ளோம்.

பெரியார் பல்கலை துணை வேந்தரின் முறைகேடு குற்றச்சாட்டு குறித்து, போலீஸ் துறையிலும், நீதிமன்றத்திலும் விசாரணை உள்ளது. இதை உயர் கல்வித்துறையும் கூர்ந்து கவனிக்கிறது. பாரதியார் பல்கலை முதுகலை ஆராய்ச்சி மையம் ஈரோட்டில் செயல்படுகிறது. இதை மூடவுள்ளதாக அரசின் கவனத்துக்கு கொண்டு வந்தனர். முதல்வரிடம் பேசி, மாணவர் நலன் காக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

சில ஆண்டுகளாக நடத்தப்படாத செட் தேர்வு மார்ச் 6, 7, 8ம் தேதிகளில் நடத்தப்படுகிறது. இனி ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செட் தேர்வு நடத்தப்படும். செட் தேர்வு முடிந்த பின், மார்ச் மாத இறுதியில் கவுரவ விரிவுரையாளர், 1000 பேரை நியமிக்க உள்ளோம். ஜூன் மாதத்தில், 4000 நிரந்தர பேராசிரியர்களை பணி நியமனம் செய்ய திட்டமிடப்பட்டு, அதற்கான கேள்வித்தாள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.






      Dinamalar
      Follow us