sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 1.06 லட்சம் பேர் பங்கேற்பு

/

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 1.06 லட்சம் பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 1.06 லட்சம் பேர் பங்கேற்பு

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வு மாவட்டத்தில் 1.06 லட்சம் பேர் பங்கேற்பு


UPDATED : மே 23, 2024 12:00 AM

ADDED : மே 23, 2024 10:20 AM

Google News

UPDATED : மே 23, 2024 12:00 AM ADDED : மே 23, 2024 10:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சேலம்:
சேலம் மாவட்டத்தில் ஜூன், 9ல் நடைபெறும் டி.என்.பி.எஸ்.சி., தேர்வில், 1.06 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர்.

சேலம் கலெக்டர் அலுவலகத்தில், நேற்று டி.என்.பி.எஸ்.சி., தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில், கலெக்டர் பிருந்தாதேவி பேசியதாவது:

டி.என்.பி.எஸ்.சி., குரூப் 4 தேர்வுக்காக, சேலம் மாவட்டத்தில், 270 தேர்வு மையங்களில், 361 தேர்வு கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், ஒரு லட்சத்து 6,082 பேர் தேர்வெழுத உள்ளனர். ஜூன் 9 காலை, 9:30 முதல், மதியம் 12:30 மணி வரை நடைபெற உள்ள தேர்வினை கண்காணிக்க, 89 நடமாடும் கண்காணிப்பு குழு, 20 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தேர்வர்கள் காலை 9:00 மணிக்கு முன் வருகை தர வேண்டும். அதற்கு பின் வரும் தேர்வர்கள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வு மையங்களுக்கு செல்வதற்கு வசதியாக சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன.

அனைத்து தேர்வு மையங்களிலும், கண்காணிப்பு கேமரா பதிவு, தடையில்லா மின்சாரம், அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் பேசினார்.






      Dinamalar
      Follow us