sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 26, 2025 ,ஐப்பசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்

/

10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்

10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்

10ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம்; தாய்க்கு பதில் தேர்வெழுதிய மகள்


UPDATED : ஏப் 03, 2025 12:00 AM

ADDED : ஏப் 03, 2025 08:36 PM

Google News

UPDATED : ஏப் 03, 2025 12:00 AM ADDED : ஏப் 03, 2025 08:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாகப்பட்டினம்:
நாகையில், 10ம் வகுப்பு தேர்வில், தாய்க்கு பதிலாக, ஆள் மாறாட்டம் செய்து தேர்வு எழுதிய மகளை, தேர்வு கண்காணிப்பாளர் பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

தமிழகம் முழுவதும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த 28ம் தேதி துவங்கி நடந்து வருகிறது. இத்தேர்வு நாகை மாவட்டத்தில் 42 மையங்களில் நடக்கிறது. பள்ளி மாணவர்களுடன், தனித்தேர்வர்களும் இத்தேர்வை எழுதி வருகின்றனர்.

நேற்று நாகை, நடராஜன் தமயந்தி மேல்நிலைப் பள்ளியில், ஆங்கில பாடத்திற்கான தனித்தேர்வு துவங்கியது. தேர்வு அறை கண்காணிப்பாளர், வினாத்தாள் மற்றும் தேர்வு எழுதுவதற்கான தாள்களை, தேர்வு எழுதுபவர்களிடம் கொடுத்து, கையெழுத்து வாங்கினார்.

அப்போது ஒரு மாணவி முகம் கவசம் அணிந்து இருந்ததால், சந்தேகமடைந்த தேர்வு அறை கண்காணிப்பாளர் முக கவசத்தை அகற்றும்படி கூறியுள்ளார்.

நுழைவு சீட்டை சோதனை செய்ததில், வருகை பதிவு குறிப்பேட்டில் வேறு நபர் புகைப்படம் இருந்தது தெரியவந்தது. அதையடுத்து, மாணவியை தேர்வு கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்று விசாரித்தனர்.

விசாரணையில், வெளிப்பாளையத்தை சேர்ந்த செல்வாம்பிகை,25, என்பதும் தனது தாய் சுகந்திக்காக ஆள் மாறாட்டம் செய்து, தேர்வு எழுத வந்தது தெரியவந்தது. இதையடுத்து, அப்பெண்ணை, வெளிப்பாளையம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us