UPDATED : மார் 18, 2026 05:31 PM
ADDED : மார் 18, 2026 05:33 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம், குமாரசாமிப்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா நடந்தது. முதல்வர் பிரேமலதா தலைமை வகித்தார். பெரியார் பல்கலைக்கழக பதிவாளர் ராஜ், தேர்வாணையர் முருகேசன் ஆகியோர், மாணவ, மாணவியருக்கு பட்டம் வழங்கினர்.
இதில், 2024 - 25ம் கல்வி ஆண்டில், பெரியார் பல்கலைக்கழகத்தால் பட்டம் பெற தகுதியான, 1,059 இளநிலை மாணவர்கள், 393 முதுநிலை மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது.
மேலும், பருவ தேர்வுகளில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு சான்றிதழ், பதக்கம், அறக்கட்டளை நிதி மூலம் பரிசுகள் வழங்கப்பட்டன.

