UPDATED : ஜூன் 10, 2025 12:00 AM
ADDED : ஜூன் 10, 2025 09:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை:
மதுரையில் கல்வி அலுவலர்களுக்கான மாறுதல் கலந்தாய்வில் 15 பேர் பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.
சி.இ.ஓ., அலுவலகத்தில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு சி.இ.ஓ., ரேணுகா தலைமை வகித்தார். நேர்முக உதவியாளர் கந்தசாமி, கண்காணிப்பாளர் திருப்பதி முன்னிலை வகித்தனர். அரசு பள்ளிகள், கல்வி அலுவலகங்களில் மூன்று ஆண்டுகளுக்கு மேல் ஒரே இடத்தில் பணியாற்றிய இளநிலை உதவியாளர்கள் 4 பேரில் 3 பேர் மாவட்டத்திற்குள் மாறுதல் பெற்றனர். ஒருவர் வெளி மாவட்டத்திற்கான கலந்தாய்வில் பங்கேற்க உள்ளார். கல்வி அலுவலர்களுக்கான விருப்ப மாறுதலில் 32 பேர் பங்கேற்றனர். 12 பேருக்கு மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.