sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

திருவள்ளுவர் ஓவியப்போட்டி 150 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

/

திருவள்ளுவர் ஓவியப்போட்டி 150 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

திருவள்ளுவர் ஓவியப்போட்டி 150 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

திருவள்ளுவர் ஓவியப்போட்டி 150 பள்ளி மாணவர்கள் பங்கேற்பு


UPDATED : டிச 17, 2024 12:00 AM

ADDED : டிச 17, 2024 09:00 AM

Google News

UPDATED : டிச 17, 2024 12:00 AM ADDED : டிச 17, 2024 09:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

நாமக்கல்:
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை அமைத்து, 25 ஆண்டுகள் நிறைவு விழாவையொட்டி, நாமக்கல் மாவட்ட மைய நுாலக வாசகர் வட்டம் மற்றும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றம் சார்பில், திருவள்ளுவர் தொடர்பான ஓவிய போட்டி, நாமக்கல் மாநகராட்சி கோட்டை உயர்நிலைப்பள்ளியில் நடந்தது.

அதில், 150க்கும் மேற்பட்ட பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்றனர். நாமக்கல் மாவட்ட மைய நுாலகர் சக்திவேல் தலைமை வகித்தார். 3ம் நிலை நுாலகர் தங்கவேல், மைய நுாலக வாசகர் வட்ட தலைவரும், ஜவகர் சிறுவர் மன்ற இயக்குனர் தில்லை சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஓவிய ஆசிரியர்கள் வெங்கடேஷ், விஜயகுமார், சேகர், மகேந்திரன் மற்றும் ஜவகர் சிறுவர் மன்ற ஆசிரியர்கள் ஓவிய போட்டிகளை நடத்தினர். சிறந்த ஓவியங்கள் தேர்வு செய்யப்பட்டு, வரும், 23ல், மைய நுாலக வளாகத்தில் காட்சிப்படுத்தப்படும். மேலும் தேர்வு செய்-யப்படும் ஓவியங்களுக்கு பரிசும் வழங்கப்படும்.






      Dinamalar
      Follow us