sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சென்னையில் கல்லுாரி மாணவர்கள் மோதல் 10 ஆண்டுகளில் 231 வழக்குகள் பதிவு

/

சென்னையில் கல்லுாரி மாணவர்கள் மோதல் 10 ஆண்டுகளில் 231 வழக்குகள் பதிவு

சென்னையில் கல்லுாரி மாணவர்கள் மோதல் 10 ஆண்டுகளில் 231 வழக்குகள் பதிவு

சென்னையில் கல்லுாரி மாணவர்கள் மோதல் 10 ஆண்டுகளில் 231 வழக்குகள் பதிவு


UPDATED : நவ 28, 2024 12:00 AM

ADDED : நவ 28, 2024 09:54 AM

Google News

UPDATED : நவ 28, 2024 12:00 AM ADDED : நவ 28, 2024 09:54 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னையில் மாணவர்கள் மோதலில் தொடர்புடைய, இரு கல்லுாரிகளின் முதல்வர்களை எதிர் மனுதாரர்களாக சேர்த்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், மாணவர்கள் மோதல் தொடர்பாக, 231 வழக்குகள் பதிவாகி உள்ளதாக, காவல் துறை தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் சுந்தர். சென்னை மாநில கல்லுாரி மாணவரான அவர், கடந்த மாதம், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்; மருத்துவமனையில் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேரை கைது செய்த பெரியமேடு போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர். இவர்களில் ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர், ஜாமின் கேட்டு, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன், நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, கூடுதல் அரசு வழக்கறிஞர் லியோனார்ட் அருள் ஜோசப் செல்வம் ஆஜராகி, கீழ்ப்பாக்கம் போலீஸ் துணை கமிஷனரின் அறிக்கையை தாக்கல் செய்தார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது:

கடந்த 10 ஆண்டுகளில், மாணவர்கள் மோதல், அடிதடி உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்பாக, பல்வேறு காவல் நிலையங்களில், 231 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. இதில், சென்னை மாநகர எல்லைக்குட்பட்ட நிலையங்களில், 198 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே போலீசாரால், 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றில் பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் மீது, 58 வழக்குகளும், மாநில கல்லுாரி மாணவர்கள் மீது, 28 வழக்குகளும் உள்ளன. போலீஸ் குற்ற ஆவண காப்பக புள்ளிவிபரங்கள்படி, 231 வழக்குகளில், 88 மட்டுமே விசாரணையில் உள்ளன.

திரும்ப பெறுதல் போன்ற காரணங்களால், 55 வழக்குகள் தீர்வு காணப்பட்டுள்ளன; 35 வழக்குகளில் விசாரணை நடந்து வருகிறது. ஏழு வழக்குகளில் தண்டனை வழங்கப்பட்டு, 25 வழக்குகளில் தொடர்புடையவர்கள் விடுவிக்கப்பட்டு உள்ளனர். ஐந்து வழக்குகள் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

உயர் கல்வி துறை தரப்பில் ரவிசந்திர தேவகுமார் ஆஜராகி, மாணவர்கள் மோதல் விவகாரத்தில், மாநில கல்லுாரி, பச்சையப்பன் கல்லுாரி முதல்வர்கள் இடையேயான சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு குறித்து, நீதிமன்றத்துக்கு தெரியப்படுத்தப்படும், என்றார்.

இதை பதிவு செய்த பின், நீதிபதி பிறப்பித்த உத்தரவு:

இரு கல்லுாரிகளின் மாணவர்கள் மீது தான் பெரும்பாலான வழக்குகள் பதிவாகியுள்ளன. எனவே, இக்கல்லுாரிகளின் பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில், இப்பிரச்னையின் தீவிரம் குறித்து உணர்த்த, சம்பந்தப்பட்ட கல்லுாரிகளின் முதல்வர்களுக்கு, உயர் கல்வித் துறை அறிவுறுத்த வேண்டும்.

சமீபத்தில் கூட, இதுபோல நிகழ்வு சென்னையில் நடந்துள்ளது. எனவே, இவ்வழக்கில் இரு கல்லுாரிகளின் முதல்வர்கள் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்படுகின்றனர்.

இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதி, ஜாமின் மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தார்.






      Dinamalar
      Follow us