sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

285 கட்டுரைகள் தேர்வு

/

285 கட்டுரைகள் தேர்வு

285 கட்டுரைகள் தேர்வு

285 கட்டுரைகள் தேர்வு


UPDATED : ஆக 26, 2024 12:00 AM

ADDED : ஆக 26, 2024 10:36 AM

Google News

UPDATED : ஆக 26, 2024 12:00 AM ADDED : ஆக 26, 2024 10:36 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழனி:
பழனியில் நடந்த அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டில், 1,500க்கும் மேற்பட்ட தலைப்புகளில் ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில், 285 கட்டுரைகள் தேர்வாகி உள்ளன.

மாநாட்டில், தமிழகம், வெளிமாநிலம், இங்கிலாந்து, துபாய், மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து அறிஞர்கள், ஆய்வாளர்கள் வாயிலாக, முத்துக்குமாரசுவாமி பிள்ளைத் தமிழ் முருகன், நவ பாஷாண முருகன், அழகன் முருகன், பாதயாத்திரையில் முருகன், தமிழ்க் கடவுள் முருகன், முருகனும் முத்தமிழும் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில், முருகன் சம்பந்தமான, 1,500 ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன.

ஆய்வுக் கட்டுரைகள் குறித்து விவாதிக்க வாரியார் அரங்கம், பாம்பன் சுவாமிகள் அரங்கம், வண்ண சரபம் தண்டபாணி சுவாமிகள் அரங்கம் உட்பட ஐந்து ஆய்வு அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்த அரங்கங்களில் நெறியாளர்களாக ஆதீனங்கள், கல்லுாரி பேராசிரியர்கள், தமிழ் வளர்ச்சிக் கழக இயக்குனர்கள் உட்பட பலர் செயல்பட்டனர். இவர்கள் முன் ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. 285 கட்டுரைகள் தேர்வு செய்யப்பட்டன. சமர்ப்பித்தவர்கள் மாநாட்டில் கவுரவிக்கப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட கட்டுரைகளை தொகுத்து, மலராக வெளியிடவும் முடிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us