sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

3 மொழி கற்க உரிமை இல்லையா; மாணவிகள் வீடியோ வைரல்!

/

3 மொழி கற்க உரிமை இல்லையா; மாணவிகள் வீடியோ வைரல்!

3 மொழி கற்க உரிமை இல்லையா; மாணவிகள் வீடியோ வைரல்!

3 மொழி கற்க உரிமை இல்லையா; மாணவிகள் வீடியோ வைரல்!


UPDATED : பிப் 20, 2025 12:00 AM

ADDED : பிப் 20, 2025 05:14 PM

Google News

UPDATED : பிப் 20, 2025 12:00 AM ADDED : பிப் 20, 2025 05:14 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ராமநாதபுரம்:
அரசு பள்ளி மாணவிகளாகிய எங்களுக்கு மும்மொழி கற்க உரிமையில்லையா என அரசுப் பள்ளி மாணவிகள் மூன்று பேர் வெளியிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

கடந்த 2020ம் ஆண்டு புதிய தேசிய கல்வி கொள்கை மத்திய அரசு அறிமுகம் செய்தது. மத்திய அரசின் சிக்ஷா அபியான் எனப்படும் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு தர வேண்டிய ரூ.2,152 நிதியை மத்திய அரசு ஒதுக்கவில்லை. மத்திய அரசின் பி.எம்.ஸ்ரீ பள்ளித் திட்டத்தில் இணைவதற்கு சம்மதம் தெரிவித்து, தமிழக அரசு கையெழுத்திட்டால் மட்டுமே, நிதி ஒதுக்க முடியும் என, மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.எம்.ஸ்ரீ பள்ளி திட்டத்தில் இணைந்தால், அது தேசிய கல்வி கொள்கையையும், மும்மொழி கொள்கையையும் ஏற்றுக் கொண்டதாகிவிடும் என்று கூறி அதில் இணைவதற்கு தமிழக அரசு மறுத்து வருகிறது.

இன்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதிய கடிதத்தில், இரு மொழிக் கொள்கையை பின்பற்றுவதில் உறுதியாக உள்ளோம் எனக்கூறியுள்ளார். தி.மு.க.,வின் இந்த முடிவுக்கு அதன் கூட்டணி கட்சிகள் ஆதரவு அளித்து வந்தாலும், ஏராளமானோர், அரசுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மூன்றாவதாக ஒரு மொழியை கற்க வாய்ப்பு வழங்கலாம் என தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த தெளிச்சாத்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவிகள் 3 பேர் பேசும் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகி உள்ளது.

அதில் அந்த மாணவிகள் கூறியுள்ளதாவது:


தமிழக முதல்வருக்கு வணக்கம். அரசு பள்ளி மாணவிகளாகிய எங்களுக்கு மும்மொழி கற்க உரிமையில்லையா? ஏழை மாணவர்களாகிய எங்களுக்கு இந்த வாய்ப்பை வழங்க அனுமதி கொடுங்கள், எனக் கூறியுள்ளனர்.

தற்போது, இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.






      Dinamalar
      Follow us