UPDATED : செப் 05, 2026 10:14 PM
ADDED : செப் 05, 2026 10:15 PM
அ நிறம் | அளவு
புதுடில்லி:
நாடு தழுவிய அளவில், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் நடத்திய சிறப்பு இயக்கம் மூலம், 3,800க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர்.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சகத்தின் கீழ், தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு கமிஷன் இயங்கி வருகிறது. இந்த கமிஷன், குழந்தை தொழிலாளர் முறையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள குழந்தைகளை கண்டறிந்து, மீட்டு, மறுவாழ்வு அளிக்கும் பணிகளை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுடன் இணைந்து மேற்கொண்டது.
கடந்த ஜூன் 12, ஆக., 31 வரை நாடு முழுதும் நடந்த மீட்பு மற்றும் மறுவாழ்வு என்ற சிறப்பு இயக்கத்தின் மூலம், 3,800க்கும் மேற்பட்ட குழந்தை தொழிலாளர்கள் மீட்கப்பட்டனர். இது தொடர்பாக, 575 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.
