sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

செயற்கை நுண்ணறிவு திறன்களை கல்வியில் ஒருங்கிணைக்கும் 'எஸ்ஓஏஆர்' திட்டம்

/

செயற்கை நுண்ணறிவு திறன்களை கல்வியில் ஒருங்கிணைக்கும் 'எஸ்ஓஏஆர்' திட்டம்

செயற்கை நுண்ணறிவு திறன்களை கல்வியில் ஒருங்கிணைக்கும் 'எஸ்ஓஏஆர்' திட்டம்

செயற்கை நுண்ணறிவு திறன்களை கல்வியில் ஒருங்கிணைக்கும் 'எஸ்ஓஏஆர்' திட்டம்


UPDATED : அக் 23, 2025 08:49 AM

ADDED : அக் 23, 2025 08:49 AM

Google News

UPDATED : அக் 23, 2025 08:49 AM ADDED : அக் 23, 2025 08:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
உலகளவில் செயற்கை நுண்ணறிவு, இயந்திரக் கற்றல், தரவியல் முன்னேற்றத்தால் கல்வி மற்றும் தொழில்நுட்ப துறைகளில் மாற்றம் உருவாகி வருகிறது. இதனை முன்னிட்டு, இந்திய திறன் மேம்பாட்டு அமைச்சகம் “செயற்கை நுண்ணறிவு தயார்நிலைக்கான திறன் (SOAR)” திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

2025 ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட இத்திட்டம், பிரதமரின் திறன் மேம்பாட்டு திட்டம் 4.0-ன் கீழ் உருவாக்கப்பட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களிடையே செயற்கை நுண்ணறிவு கல்வியறிவை வளர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதன் மூலம் இயந்திரக் கற்றல், நெறிமுறை செயற்கை நுண்ணறிவு பயன்பாடு போன்ற அடிப்படைகள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.

கல்வியாளர்களுக்கு சிறப்புப் பயிற்சி அளித்து, ஏற்கனவே உள்ள பாடத்திட்டங்களில் செயற்கை நுண்ணறிவு தொகுதிகளை இணைக்கும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. தொழில்துறை தேவைகளுக்கு ஏற்ப திறன்களை மேம்படுத்துவதிலும், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதிலும் எஸ்ஓஏஆர் முக்கிய பங்காற்றுகிறது.

இந்த முயற்சியின் மூலம், இந்திய இளைஞர்கள் தொழில்நுட்ப மற்றும் பொருளாதார வளர்ச்சியை வழிநடத்தும் திறனை பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. “வளர்ச்சியடைந்த பாரதம் 2047” நோக்கத்தை அடைவதற்கான முக்கிய அடித்தளமாகவும், உலகளாவிய தொழில்நுட்ப முன்னேற்றங்களில் இந்தியாவை முன்னணியில் நிறுத்தும் முயற்சியாகவும் இந்த எஸ்ஓஏஆர் திட்டம் கருதப்படுகிறது.






      Dinamalar
      Follow us