UPDATED : அக் 16, 2025 07:25 AM
ADDED : அக் 16, 2025 07:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி:
முத்தியால்பேட்டை சின்னத்தா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் விக்சித் பாரத் பில்டாதான் 2025 நிகழ்ச்சி நடந்தது.
மத்திய கல்வித்துறை அமைச்சகம் நிதி ஆயோக் அட்டல் மிஷனுடன் இணைந்து பள்ளி மாணவர்களின் படைப்பாற்றலை ஒருங்கிணைக்கும் இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக கவர்னர் கைலாஷ்நாதன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். கல்வித்துறை அமைச்சர் நமச்சிவாயம், கல்வித்துறை செயலர், கல்வித்துறை இயக்குனர், துணை இயக்குனர், மாநில திட்ட இயக்குனர் உட்பட பலர் கலந்த கொண்டனர்.ஏற்பாடுகளை பள்ளி முதல்வர் செய்திருந்தார்.