sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.40 லட்சம் நுாதன மோசடி

/

ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.40 லட்சம் நுாதன மோசடி

ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.40 லட்சம் நுாதன மோசடி

ஓய்வுபெற்ற பேராசிரியரிடம் ரூ.40 லட்சம் நுாதன மோசடி


UPDATED : நவ 01, 2024 12:00 AM

ADDED : நவ 01, 2024 12:23 PM

Google News

UPDATED : நவ 01, 2024 12:00 AM ADDED : நவ 01, 2024 12:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை, கோவைப்புதுாரை சேர்ந்தவர் கந்தசாமி, 63. ஓய்வுபெற்ற பேராசிரியர்; ரியல் எஸ்டேட் தொழில் செய்கிறார். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் இவரது மொபைல் எண்ணிற்கு அழைப்பு வந்தது.
அதில் பேசிய நபர், தன்னை மும்பை போலீஸ் அதிகாரி என அறிமுகப்படுத்தி கொண்டார். அவர், கந்தசாமியின் ஆதார் கார்டை பயன்படுத்தி மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் பல வங்கி பரிமாற்றங்களை செய்துள்ளதாக கூறினார்.
இதையடுத்து, வீடியோ காலில் அழைத்த மற்றொரு நபர், ரிசர்வ் வங்கி விதிகளை மீறி, கந்தசாமி பணபரிமாற்றம் செய்துள்ளதாக தெரிவித்தார். போலீஸ் அதிகாரி போல் சீருடை அணிந்து கோர்ட் ஆவணங்களையும் காட்டினார்.
பின், வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு தெரிவித்தனர். விசாரணை முடிந்தவுடன் பணத்தை திருப்பி அனுப்புவதாகவும் கூறினர்.
அதை உண்மை என நம்பிய கந்தசாமி, அவரது வங்கி கணக்கில் இருந்த 40 லட்சம் ரூபாயை, ஆன்லைன் வாயிலாக அனுப்பினார். அதன் பின் பணம் திரும்ப வரவில்லை. கந்தசாமி புகாரின்படி, கோவை சைபர் கிரைம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us