காஞ்சி சங்கரா கல்லுாரியில் 828 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி
காஞ்சி சங்கரா கல்லுாரியில் 828 மாணவ - மாணவியருக்கு மடிக்கணினி
UPDATED : பிப் 11, 2026 01:58 PM
ADDED : பிப் 11, 2026 02:00 PM

ஏனாத்துார்:
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், மூன்றாம் ஆண்டு இளங்கலை பயிலும் 828 மாணவ, மாணவியருக்கு, அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
காஞ்சிபுரம் சங்கரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில், தமிழக அரசின், 'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ், அரசு மடிக்கணினி வழங்கும் நிகழ்ச்சி கல்லுாரி கருத்தரங்க அறையில் நேற்று நடந்தது.
கல்லுாரி தலைவரும், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரியுமான ராமச்சந்திரன், தமிழக அரசின் மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் முக்கியத்துவம் குறித்து பேசினார்.
கல்லுாரி முதல்வர் முனைவர் கலைராம வெங்கடேசன் தலைமை வகித்தார். இதில், கல்லுாரியில் மூன்றாம் ஆண்டு இளங்கலை பயிலும், 828 மாணவ, மாணவியருக்கு அரசு மடிக்கணினி வழங்கப்பட்டது.

