தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஆச்சார்யா கல்லுாரியில் மாணவர்கள் கவுரவிப்பு

ஆச்சார்யா கல்லுாரியில் மாணவர்கள் கவுரவிப்பு

ஆச்சார்யா கல்லுாரியில் மாணவர்கள் கவுரவிப்பு


UPDATED : ஏப் 17, 2026 07:27 PM

ADDED : ஏப் 17, 2026 07:29 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஏப் 17, 2026 07:27 PM ADDED : ஏப் 17, 2026 07:29 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி:
ஆச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி மாணவர்கள் வேலைவாய்ப்பு பெற்றதை அடுத்து அவர்களை கவரவித்து பாராட்டப்பட்டது.

தொழில் முன்னேற்றம் மற்றும் தொழில்துறை உறவுகள் மையம் சார்பில், ஆரேலியா 2026 - சாதனைகளின் பொற்கணம் என்ற நிகழ்ச்சி அச்சார்யா பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி அரங்கில் நடந்தது.

மாணவர்களின் வேலைவாய்ப்பு சாதனைகளை கொண்டாடவும், கவுரவிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் சண்முக பிரியா வரவேற்றார். ஆக்சென்சர் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் உதயகுமார் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். கல்லுாரி முதல்வர் குருலிங்கம் வாழ்த்தி பேசினார். ஆனந்த் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார்.

முன்னணி நிறுவனங்களில் பணியமர்த்தப்பட்ட 200 மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர். இதில், 10 மாணவர்கள் டிரீம் ஆப்பர் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு மொத்தம் 320 வேலைவாய்ப்பு ஆபர்கள் பெறப்பட்டுள்ளன. 47 முன்னணி நிறுவனங்கள் கல்லுாரியை அணுகி மாணவர்களைத் தேர்வு செய்துள்ளவர். இதன் மூலம் கல்லுாரி 96 சதவீதம் வேலைவாய்ப்பு சாதனையை பதிவு செய்துள்ளது.

நிகழ்ச்சியில், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கிருபாகரன் நன்றி கூறினார்.


தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us