sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 16, 2026 ,தை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பொதுத்தேர்வு நெருங்குவதால் கூடுதல் பயிற்சி

/

பொதுத்தேர்வு நெருங்குவதால் கூடுதல் பயிற்சி

பொதுத்தேர்வு நெருங்குவதால் கூடுதல் பயிற்சி

பொதுத்தேர்வு நெருங்குவதால் கூடுதல் பயிற்சி


UPDATED : ஜன 06, 2026 07:18 PM

ADDED : ஜன 06, 2026 07:23 PM

Google News

UPDATED : ஜன 06, 2026 07:18 PM ADDED : ஜன 06, 2026 07:23 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
அரையாண்டு விடுமுறை முடிந்து பள்ளிகள் நேற்று மீண்டும் திறக்கப்பட்டன. முதல் நாளிலேயே மாணவர்களுக்கு திருத்தப்பட்ட அரையாண்டுத் தேர்வு விடைத்தாள்கள் வழங்கப்பட்டன.

நடப்பு கல்வியாண்டின் பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பின் பொதுத்தேர்வுகள் நெருங்கி வருவதால், மாணவர்களின் தேர்ச்சி சதவீதத்தை அதிகரிக்க மாவட்ட பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக, காலாண்டு மற்றும் அரையாண்டுத் தேர்வுகளில் அனைத்து பாடங்களிலும் மாணவர்கள் பெற்ற மதிப்பெண்களை ஒப்பிட்டு பார்த்து, அதற்கேற்ப கூடுதல் பயிற்சி வழங்க அனைத்து உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாநில கற்றல் அடைவுத் தேர்வு (ஸ்லாஸ்) குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், 'எண்ணும் எழுத்தும்' திட்டத்தின் கீழ் ஆரம்பக் கல்வி பயிலும் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தவும், அதனை முறையாக ஒப்பிடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

தேசிய திறனறித் தேர்வு, முதல்வர் திறனறித் தேர்வு, ஸ்லாஸ் மற்றும் பொதுத்தேர்வுகள் எனத் தேர்வுகள் அடுத்தடுத்து அணிவகுத்துள்ளன. தேர்விற்கு தயாராக குறைந்த காலமே உள்ளதால், மாணவர்களின் தேர்ச்சியை உறுதி செய்யும் வகையில், அவர்களது வருகை பதிவை 100 சதவீதம் உறுதிப்படுத்த, வகுப்பு ஆசிரியர்களுக்கு மாவட்ட பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.






      Dinamalar
      Follow us