sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கவர்னரிடம் அ.தி.மு.க., மனு

/

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கவர்னரிடம் அ.தி.மு.க., மனு

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கவர்னரிடம் அ.தி.மு.க., மனு

கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கவர்னரிடம் அ.தி.மு.க., மனு


UPDATED : மே 31, 2024 12:00 AM

ADDED : மே 31, 2024 10:41 AM

Google News

UPDATED : மே 31, 2024 12:00 AM ADDED : மே 31, 2024 10:41 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுச்சேரி:
புதுச்சேரியில் கட்டாய கல்வி உரிமைச்சட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, புதுச்சேரி அ.தி.மு.க., செயலாளர் அன்பழகன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அவர், கவர்னர் ராதாகிருஷ்ணனிடம் அளித்த மனு:

ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக, கடந்த 2010ம் ஆண்டு, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டம், கடந்த 2011ம் ஆண்டிலேயே ஜெ., ஆட்சியின்போது தமிழகத்தில் அமல்படுத்தப்பட்டது. ஆனால், 10 ஆண்டுகளாக புதுச்சேரி அரசு அமல்படுத்தாமல் இருக்கிறது.

அதற்கான அரசாணையை இன்றுவரை வெளியிடாமல், மத்திய அரசின் இந்த சட்டத்தை, ஆளும் என்.ஆர். காங்., - பா.ஜ., கூட்டணி அரசு புறக்கணித்து வருகிறது.

ஏழை எளிய மாணவர்களின் நலனுக்காக, இந்த கல்வியாண்டில், புதுச்சேரி மாநிலத்தில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தை அமல்படுத்த, கவர்னர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இதன் மூலம், 40 ஆயிரம் ஏழை எளிய மாணவர்கள் ஆண்டுதோறும் பயன் பெறுவர்.
இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவைத்தலைவர் அன்பானந்தம், இணைச் செயலாளர்கள் திருநாவுக்கரசு, முன்னாள் கவுன்சிலர் கணேசன், நகர செயலாளர் அன்பழகன், இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை செயலாளர் தமிழ்வேந்தன் உடன் இருந்தனர்.






      Dinamalar
      Follow us