UPDATED : ஜூலை 12, 2026 06:09 PM
ADDED : ஜூலை 12, 2026 06:11 PM
அ நிறம் | அளவு
ஸ்ரீவில்லிபுத்துார்:
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்துார் அருகே மாணவர்கள் யாரும் இல்லாததால் அரசு உதவிபெறும் பள்ளி மூடப்பட்டது.
ஸ்ரீவில்லிபுத்துார் தாலுகா சல்லிப்பட்டியில் அரசு உதவிபெறும் ஆர்.சி., துவக்கப்பள்ளி செயல்பட்டது. இங்கு கடந்த சில ஆண்டுகளாக மாணவர் சேர்க்கை படிப்படியாக குறைந்தது.
5ம் வகுப்பில் ஒரே ஒரு மாணவர் மட்டுமே இருந்தார். அந்த மாணவரும் நடப்பு கல்வியாண்டில் ராஜபாளையத்திற்கு மாறினார். இங்கு பணியாற்றிய ஒரே ஒரு ஆசிரியரும் ஸ்ரீவில்லிபுத்துாரில் உள்ள பள்ளிக்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.
இதனால் அப்பள்ளி தற்காலிகமாக மூடப்பட்டது.
