தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்

ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் தொழில்நுட்ப கருத்தரங்கம்


UPDATED : மார் 05, 2026 02:47 PM

ADDED : மார் 05, 2026 02:49 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 05, 2026 02:47 PM ADDED : மார் 05, 2026 02:49 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஏ.கே.டி., பொறியியல் கல்லுாரியில் கணினி, தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவு பொறியியல் துறைகள் சார்பில் தொழில்நுட்ப தொலைநோக்கு பார்வை (டெக்னோவிஸ்டா - 2026) என்ற தலைப்பில் ஒரு நாள் கருத்தரங்கம் நடந்தது.

நிகழ்ச்சிக்கு கல்லுாரி தாளாளர் மகேந்திரன் தலைமை தாங்கினார். நிர்வாக இயக்குனர் ராஜேந்திரன், செயலாளர் லட்சுமிபிரியா, நிர்வாக இணை இயக்குனர் டாக்டர் அபிநயா ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி முதல்வர் சிவக்குமரன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கேப் ஜெமினி நிறுவனத்தின் நிர்வாக ஆலோசகர் ஷாலினி கண்ணன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று பேசினார்.

தொடர்ந்து கல்லுாரி மாணவர்களுக்கு பல்வேறு தொழில்நுட்ப போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. இதில் கல்லுாரியின் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us