sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தொடக்க பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க பொறுப்பு அதிகாரி நியமனம்

/

தொடக்க பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க பொறுப்பு அதிகாரி நியமனம்

தொடக்க பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க பொறுப்பு அதிகாரி நியமனம்

தொடக்க பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க பொறுப்பு அதிகாரி நியமனம்


UPDATED : செப் 08, 2025 12:00 AM

ADDED : செப் 08, 2025 05:02 PM

Google News

UPDATED : செப் 08, 2025 12:00 AM ADDED : செப் 08, 2025 05:02 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தொடக்கப் பள்ளிகளில் இடைநிற்றலை குறைக்க, மாவட்ட கல்வி அலுவலர்கள், பொறுப்பு அலுவலர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்.

'நாட்டில் 5 வயது முதல், 14 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி கற்க வேண்டும்' என, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆனாலும், பொருளாதாரத்தில் பின்தங்கியோர், பள்ளிகளில் இருந்து தொலைவில் வசிப்போர், அடிக்கடி இடம் மாறு வோர், நிரந்தர வசிப்பிடம் இல்லாதோர், தங்களின் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப ஆர்வம் காட்டுவதில்லை.

இந்நிலையில், காலை, மதியம் சத்துணவு, இலவச பாடப் புத்தகங்கள், சீருடை, எழுது பொருட்கள் உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படுகின்றன.

பீடி, பட்டாசு தொழிலாளர்கள், பட்டிய லினத்தவர், சிறுபான்மை னத்தவரின் பெண் குழந்தைகளுக்கு, மூன்று, நான்கு, ஐந்தாம் வகுப்புகளில், ஆண்டுக்கு 500 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படுகிறது.

இது குறித்த விபரங்களை பெற்றோரிடம் தெரிவித்து, இடைநின்ற மாணவ - மாணவியரை மீண்டும் பள்ளிகளில் சேர்க்கும் பொறுப்பு, அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்களிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us