தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/14 ஓய்வு ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

14 ஓய்வு ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

14 ஓய்வு ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா


UPDATED : மே 06, 2024 12:00 AM

ADDED : மே 06, 2024 09:22 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மே 06, 2024 12:00 AM ADDED : மே 06, 2024 09:22 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சங்கராபுரம் :
சங்கராபுரத்தில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.

சங்கராபுரத்தில் தமிழ்நாடு தொடக்க பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி ஓய்வு பெறும் ஆசிரியர்கள் ஜெயசீலி, பி.ஜெசிந்தா, அந்தோணிசாமி, மேகலை, கலைச்செல்வி, ஜேக்கப், பிரான்சிஸ்ராஜ், கார்த்திகேயன், ஏ.ஜெசிந்தா, அல்போன்ஸ், சூசைராஜ், செல்வராஜ், ஜெகதீசன், சாந்தகுமாரி ஆகிய 14 ஆசிரிர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.

வாசவி மண்டபத்தில் நடந்த விழாவிற்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் பாலு வரவேற்றார்.

மாநிலத் தலைவர் லட்சுமி நாராயணன், பொருளாளர் குமார், மாவட்ட செயலாளர் தண்டபாணி, தலைவர் அண்ணாமலை, பொருளாளர் ராஜாராம், பழனிவேல், அய்யாசாமி வாழ்த்திப் பேசினர்.

சிறப்பு விருந்தினர் மாநில பொதுச் செயலாளர் ரங்கராஜன், பணி ஓய்வு பெறும் ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கி பேசினார்.

விழாவில் சின்னசேலம், கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், உளுந்துார்பேட்டை, திருக்கோவிலுார், ரிஷிவந்தியம் வட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். வட்ட பொருளாளர் தேவேந்திரன் நன்றி கூறினார்.

ரிஷிவந்தியம்

வாணாபுரம் அடுத்த அரியலுார் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு, தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணைத் தலைவர் முத்தமிழன் தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் லுார்துசாமி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாநில பொதுச் செயலாளர் தாஸ் பங்கேற்று, பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் வின்சென்ட் ஜெயராஜ், அந்தோணிசாமி, தோமையம்மாள், ஆரோக்கியசாமி மற்றும் தியாகராஜன் ஆகியோரது பணியை பாராட்டி, கேடயம் வழங்கி கவுரவித்தார்.

நிகழ்ச்சியில், மாநில தலைவர் லட்சுமிபதி, வட்டார கல்வி அலுவலர்கள் பழனிமுத்து, மோகன், சவுந்தர்ராஜன், வட்டார மேற்பார்வையாளர் (பொ) ராமலிங்கம், மாவட்ட செயலாளர் ரமேஷ், மகளிரணி செயலாளர் வள்ளி, மாவட்ட தலைவர் லாரன்ஸ் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டு, ஓய்வு பெறும் ஆசிரியர்களை பாராட்டி நினைவு பரிசு வழங்கினர். வட்டார பொருளாளர் முருகதாஸ் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us