sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

5 லட்சம் கார்களுக்கு இணையாக மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா 'இன்ஹேலர்'

/

5 லட்சம் கார்களுக்கு இணையாக மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா 'இன்ஹேலர்'

5 லட்சம் கார்களுக்கு இணையாக மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா 'இன்ஹேலர்'

5 லட்சம் கார்களுக்கு இணையாக மாசு ஏற்படுத்தும் ஆஸ்துமா 'இன்ஹேலர்'


UPDATED : அக் 08, 2025 09:48 PM

ADDED : அக் 08, 2025 09:50 PM

Google News

UPDATED : அக் 08, 2025 09:48 PM ADDED : அக் 08, 2025 09:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:
ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோயாளிகள் மருந்தை சுவாச பாதைக்குள், உள்ளிழுக்க பயன்படுத்தும், 'இன்ஹேலர்' கருவிகளில் உள்ள ஒருவகை வாயுக்களால் ஏற்படும் காற்று மாசு, ஆண்டுக்கு 5.30 லட்சம் பெட்ரோல் கார்களால் ஏற்படும் காற்று மாசுக்கு இணையானது என, அமெரிக்க ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆஸ்துமா மற்றும் நுரையீரல் நோய் உள்ளவர்கள் இன்ஹேலர் கருவிகள் மூலம் தங்களுக்கான மருந்தை பயன்படுத்துகின்றனர். இதில் 'மீட்டர்டுடோஸ் இன்ஹேலர்' உலர் பவுடர் உடைய இன்ஹேலர், 'சாப்ட் மிஸ்ட் இன்ஹேலர்' போன்ற வகைகள் உள்ளன.

இவை குறித்து, அமெரிக்காவின் கலிபோர்னியா பல்கலை சார்பில், நுரையீரல் நிபுணர் டாக்டர் வில்லியம் பெல்ட்மேன் தலைமையில் ஆய்வு நடந்தது. அதன் முடிவுகள் தற்போது வெளியிடப்பட்டுள்ளன.

அதன் விபரம்:


மீட்டர்டு-டோஸ் இன்ஹேலர்களில் மருந்தை எளிதாக நுரையீரலுக்குள் செலுத்த, 'ஹைட்ரோ புளோரோ அல்கேன்' வாயு பயன்படுத்தப்படுகிறது. இது, சுற்றுச்சூழலுக்கு மிகப்பெரும் தீங்கு விளைவிக்கிறது.

கடந்த 10 ஆண்டுகளில் இன்ஹேலர்கள் வெளியிட்ட மாசுவில், 98 சதவீதமும் இவ்வகை இன்ஹேலர்களால் ஏற்பட்டுள்ளன. இது 2.50 கோடி மெட்ரிக் டன் கார்பன் உமிழ்வுக்கு இணையானது. மேலும், இது, ஓராண்டில் அமெரிக்காவில் 5.30 லட்சம் பெட்ரோல் கார்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடுக்கு சமம்.

பிற வகை இன்ஹேலர்களில் இத்தகைய வாயுக்கள் இல்லை. நோயாளிகளே வேகமாக உறிஞ்சி மருந்தை உள்ளிழுக்க வேண்டும். அதனால் அவை சுற்றுச்சூழலுக்கு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவதில்லை. எனவே டாக்டர்கள், சூழலுக்கு உகந்த இன்ஹேலர்களை பரிந்துரைக்க வேண்டும். அது அனைவருக்கும் பாதுகாப்பானது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us