sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்க முயற்சி: கவர்னர் ரவி

/

அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்க முயற்சி: கவர்னர் ரவி

அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்க முயற்சி: கவர்னர் ரவி

அரசியலமைப்பு மீதான மக்களின் நம்பிக்கையை கெடுக்க முயற்சி: கவர்னர் ரவி


UPDATED : நவ 27, 2024 12:00 AM

ADDED : நவ 27, 2024 10:27 PM

Google News

UPDATED : நவ 27, 2024 12:00 AM ADDED : நவ 27, 2024 10:27 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
அரசியலமைப்பு மற்றும் அதன் நிறுவன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்க சமூக விரோதிகள் முயற்சிக்கின்றனர், என கவர்னர் ரவி கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த அரசியலமைப்பு தின விழாவில் கவர்னர் ரவி பேசியதாவது:

நமது அரசியலமைப்பு நாட்டின் உச்சபட்ச சட்டம். பாரதத்தின் சுதந்திரத்திற்காக பாடுபட்ட லட்சக்கணக்கான தியாகிகளின் கனவுகளால் உருவானது நமது அரசியலமைப்பு. அது, சுதந்திர இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை அழகாக விளக்குகிறது. அரசியலமைப்பு என்பது பாரதத்தின் ஒவ்வோர் குடிமகனின் உணர்விலும் உத்வேகத்திலும் இருக்க வேண்டும்.

துரதிருஷ்டவசமாக சுதந்திரத்திற்குப் பிறகு, அதைப் பற்றி மக்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கு உரிய முயற்சிகள் எடுக்கப்படவில்லை.

தேச விரோத சக்திகளுடன் சில சுயநலவாதிகள் கூட்டு சேர்ந்துள்ளனர். அவர்களிடம் இளைஞர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். அப்படிப்பட்டவர்கள் இன்று போலியான மற்றும் பொய்யான கதைகளைப் பரப்புவதன் மூலம் அராஜகத்தை உருவாக்க விரும்புகின்றனர். அரசியலமைப்பு மற்றும் அதன் நிறுவன அமைப்புகள் மீதான மக்களின் நம்பிக்கையை குலைக்க முயற்சிக்கின்றனர்.

இவ்வாறு கவர்னர் ரவி பேசினார்.






      Dinamalar
      Follow us