தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை

காலாண்டு விடுமுறையில் சிறப்பு வகுப்புக்கு தடை


UPDATED : செப் 27, 2024 12:00 AM

ADDED : செப் 27, 2024 10:22 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 27, 2024 12:00 AM ADDED : செப் 27, 2024 10:22 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சென்னை:
தமிழகத்தில் உள்ள அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, நாளை (செப்., 28) முதல் அக்., 6ம் தேதி வரை காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் சிறப்பு வகுப்புகளை நடத்தக்கூடாது; பள்ளி திறக்கும் நாளன்றே மாணவர்களுக்கு விடைத்தாள்களை வழங்க வேண்டும் என, கடலுார் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

அதேசமயம், தமிழக அரசு பள்ளிக்கல்வி துறையோ, மற்ற மாவட்ட கல்வி அதிகாரிகளோ எந்த சுற்றறிக்கையும் அனுப்பவில்லை. இதனால், மற்ற மாவட்ட தலைமை ஆசிரியர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

ஆசிரியர்கள் கூறுகையில், விடுமுறையில் வகுப்புகள் நடக்கும் பட்சத்தில், ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால், மாவட்ட கல்வி அதிகாரி பொறுப்பேற்க வேண்டும் என்பதால், முன்னெச்சரிக்கையாக இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. தனியார் பள்ளிகள் எப்போதும் சுற்றறிக்கைகளை மதிப்பதில்லை என்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us