sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா: இஸ்ரோ செல்ல வாய்ப்பு

/

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா: இஸ்ரோ செல்ல வாய்ப்பு

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா: இஸ்ரோ செல்ல வாய்ப்பு

மேட்டுப்பாளையத்தில் புத்தகத் திருவிழா: இஸ்ரோ செல்ல வாய்ப்பு


UPDATED : ஆக 27, 2024 12:00 AM

ADDED : ஆக 27, 2024 10:02 AM

Google News

UPDATED : ஆக 27, 2024 12:00 AM ADDED : ஆக 27, 2024 10:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மேட்டுப்பாளையம்:
மேட்டுப்பாளையத்தில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சார்பி பத்து நாட்கள் நடைபெறும் நான்காவது புத்தகத் திருவிழா இ.எம். எஸ். திருமண மண்டபத்தில் துவங்கியது.

இதில் பள்ளி அளவில் முதன்மையாக அதிக புத்தகங்கள் வாங்கும் மாணவன், தனது ஆசிரியர் ஒருவரோடு இஸ்ரோ செல்லலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கு, 50க்கும் மேற்பட்ட புத்தக ஸ்டால்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆயிரக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. பள்ளி மாணவர்களுக்கு தேவையான தமிழ், ஆங்கில கதை, கட்டுரைகள், போட்டித் தேர்வுக்கான புத்தகங்கள் விற்பனைக்கு உள்ளன.

ஸ்டால்களில், 200 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் மாணவர்களுக்கு, கோளரங்கம் பார்க்கும் வாய்ப்பும், 500 ரூபாய்க்கு புத்தகம் வாங்கும் மாணவர்கள், தனது குடும்பத்தோடு கோளரங்கம் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. பள்ளி அளவில் முதன்மையாக அதிக புத்தகங்கள் வாங்கும் மாணவன், தனது ஆசிரியர் ஒருவரோடு இஸ்ரோ செல்லவும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த புத்தகத் திருவிழா, செப்டம்பர் 1ம் தேதி வரை, 10 நாட்கள் நடைபெறும். ஒவ்வொரு நாளும் மாலையில் சிறந்த பேச்சாளர்கள் பங்கு பெறும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

முன்னாள் தலைமை செயலர் இறையன்பு, சிந்தனை கவிஞர் கவிதாசன், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, பேராசிரியர் ஞானசம்பந்தன், பேரூர் ஆதீனம் மருதாசல அடிகளார், இஸ்ரோ விஞ்ஞானி சசிகுமார் உள்பட எழுத்தாளர்கள், பேராசிரியர்கள் பேச உள்ளனர்.

மேலும் ஒவ்வொரு நாளும் பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. காலை, 10:00 மணியிலிருந்து இரவு, 9:00 மணி வரை புத்தக ஸ்டால்கள் திறந்திருக்கும். இதற்கான ஏற்பாடுகளை புத்தகத் திருவிழா வரவேற்பு குழு மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் செய்து வருகிறது.






      Dinamalar
      Follow us