sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, நவம்பர் 07, 2025 ,ஐப்பசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

காலை உணவுத் திட்டம் 111 பள்ளிகளுக்கு விரிவாக்கம் 16 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர்

/

காலை உணவுத் திட்டம் 111 பள்ளிகளுக்கு விரிவாக்கம் 16 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர்

காலை உணவுத் திட்டம் 111 பள்ளிகளுக்கு விரிவாக்கம் 16 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர்

காலை உணவுத் திட்டம் 111 பள்ளிகளுக்கு விரிவாக்கம் 16 ஆயிரம் மாணவர்கள் பயனடைவர்


UPDATED : ஆக 26, 2025 12:00 AM

ADDED : ஆக 26, 2025 08:23 AM

Google News

UPDATED : ஆக 26, 2025 12:00 AM ADDED : ஆக 26, 2025 08:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தேனி:
மாவட்டத்தில் நகர்பகுதியில் செயல்படும் 111 பள்ளிகளுக்கு காலை உணவுத்திட்டம் இன்று முதல் விரிவுப்படுத்தப்பட உள்ளது.

இத் திட்டத்தால் 16ஆயிரம் மாணவர்கள் பயனடைவார்கள். அரசுப்பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவுத்திட்டம் அறிமுகப்படுதப்பட்டது.

அப்போது மாவட்டத்தில் 445 அரசுப்பள்ளிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. தொடர்ந்து ஊரக பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டம் விரிவு படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தற்போது 87 உதவி பெறும் பள்ளிகளை சேர்ந்த 6439 மாணவர்கள் காலை உணவு சாப்பிடுகின்றனர்.

இன்று முதல் இத்திட்டம் நகர்பகுதிகளில் உள்ள உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது.அதன்படி மாவட்டத்தில் நகர் பகுதியில் உள்ள 111 பள்ளிகளைச் சேர்ந்த 16ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்காக பெரியகுளம், போடியில் பொது சமையல் கூடங்கள் செயல்பாட்டிற்கு வர உள்ளதாக சத்துணவுத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us