UPDATED : மார் 15, 2025 12:00 AM
ADDED : மார் 15, 2025 11:38 AM

சென்னை:
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகர்ப்புறங்களில் இருக்கும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளிகளுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
*வரும் நிதியாண்டில், 10,000 புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்படும். சுய உதவிக் குழுக்களுக்கு, 37,000 கோடி ரூபாய் அளவில், வங்கிக்கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது
*உயர்கல்வி படிக்கும் மூன்றாம் பாலினத்தவருக்கு, புதுமைப்பெண் மற்றும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ், மாதம் 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும்
*முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நடப்பாண்டு நகர்ப்புறங்களில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும், 3.14 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில், இத்திட்டம் விரிவுபடுத்தப்படும்
*சென்னை, கோவை, மதுரை நகரங்களில், தலா 1,000 மாணவியர் தங்கும் வகையில், நவீன வசதிகளுடன் கூடிய, மூன்று மாணவியர் விடுதிகள், 275 கோடி ரூபாயில் அமைக்கப்படும்.