sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 20, 2025 ,ஐப்பசி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

/

துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்

துவக்க பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவக்கம்


UPDATED : ஆக 27, 2025 12:00 AM

ADDED : ஆக 27, 2025 09:50 AM

Google News

UPDATED : ஆக 27, 2025 12:00 AM ADDED : ஆக 27, 2025 09:50 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அன்னுார்:
கோவை புறநகரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. அதன்படி அன்னுார் பேரூராட்சியில், சி.எஸ்.ஐ., துவக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் நேற்று துவக்கி வைக்கப்பட்டது. இதை கோவை வடக்கு ஆர்.டி.ஓ., ராமகிருஷ்ணன் துவக்கி வைத்தார்

பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன், துணைத் தலைவர் விஜயகுமார், பள்ளி தாளாளர் பிரேம் தேவ், தலைமையாசிரியை மேரி சகிலா உள்பட பலர் பங்கேற்றனர்.

அரசு உதவி பெறும் சொக்கம்பாளையம் தேசிய வித்யாசாலை பள்ளியி லும் நேற்று இத்திட்டம் துவக்கி வைக்கப்பட்டது. சூலூர் அடுத்த பள்ளபாளையம் பேரூராட்சிக்கு உட்பட்ட அரசு உதவி பெறும் பள்ளியான கதிர் மில்ஸ் பள்ளியில், காலை உணவு திட்டம் நேற்று துவக்கப்பட்டது.

கோவை தெற்கு மாவட்ட தி.மு.க., செயலாளர் முருகேசன், சப் கலெக்டர் சங்கேத் பல்வந்த் வாகே ஆகியோர் திட்டத்தை துவக்கி வைத்து, மாணவ, மாணவியிருடன் அமர்ந்து உணவு சாப்பிட்டனர். மகளிர் திட்ட இயக்குனர் மதுரா, பள்ளபாளையம் பேரூராட்சி தலைவர் செல்வராஜ், ஒன்றிய செயலாளர் மன்னவன் மற்றும் தலைமையாசிரியர், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us