sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

கோடை விடுமுறையிலும் கை வைக்கலாமா? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்

/

கோடை விடுமுறையிலும் கை வைக்கலாமா? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்

கோடை விடுமுறையிலும் கை வைக்கலாமா? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்

கோடை விடுமுறையிலும் கை வைக்கலாமா? அரசு பள்ளி ஆசிரியர்கள் ஆதங்கம்


UPDATED : மே 07, 2025 12:00 AM

ADDED : மே 07, 2025 08:09 AM

Google News

UPDATED : மே 07, 2025 12:00 AM ADDED : மே 07, 2025 08:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:
ஒருங்கிணைந்த பள்ளி கல்வித்துறை சார்பில், அனைத்து வகை அரசு பள்ளிகளிலும், 2024-25 ஆண்டுக்கான முன் தணிக்கை, ஈரோடு மாவட்டத்தில் இன்று முதல் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக தீர்மான ஏடு, வவுச்சர், கேஸ் புக் உள்ளிட்டவற்றை தயார் நிலையில் வைத்திருக்க, அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டு கொள்ளப்பட்டுள்ளனர்.

இன்று அம்மாபேட்டை, அந்தியூர் வட்டாரத்தில் தணிக்கை குழு, பணியை மேற்கொள்ள துவங்குகிறது. நாளை பவானி, ஈரோடு, பவானிசாகர், சத்தியில்-8ல்; சென்னிமலை, பெருந்துறையில்-9ம் தேதி; கோபி, டி.என்.பாளையத்தில்-12ம் தேதி, நம்பியூரில்-13, தாளவாடியில்-14, கொடுமுடி, மொடக்குறிச்சியில்-16ல் தணிக்கை நடக்கிறது. இது

தற்காலிக பட்டியல்தான். தணிக்கை குழு எந்த தேதியிலும் பள்ளிக்கு வரலாம். எனவே தலைமை ஆசிரியர்களும் தயார் நிலையில் இருக்க பள்ளி கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது. இதற்கு தலைமை ஆசிரியர்கள் தரப்பில் ஆட்சேபம் எழுந்துள்ளது.

இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:


மே மாதத்தில் சில தினங்கள் மட்டும் தான் குடும்பத்துடன் நண்பர்கள், உறவினர்கள் வீடுகளுக்கும், சுற்றுலா- ஆன்மிக பயணம் மேற்கொள்கிறோம். மே இறுதி வாரத்தில் பள்ளி சேர்க்கை, பாட புத்தகம், நோட்டு வருகைக்காக பள்ளிக்கு வர வேண்டும். இந்த வகையில் பார்த்தால் மே மாதத்தில், 15 நாட்கள் மட்டுமே விடுப்பு கிடைக்கிறது. தற்போது அதுவும் பறிபோகவுள்ளது.

மே, 20 வரை தணிக்கை உள்ளதாக தெரிவித்துள்ளனர். தணிக்கை குழு வந்தால் ஒரு வாரம் வரை பல்வேறு பணிகளை பள்ளியில் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இதை கருத்தில் கொண்டு கோடை விடுமுறையை ஆசிரியர்கள் குடும்பத்துடன் கழிக்க வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us