sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மருத்துவ மாணவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு

/

மருத்துவ மாணவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு

மருத்துவ மாணவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு

மருத்துவ மாணவர்கள் இருவர் மீது வழக்கு பதிவு


UPDATED : அக் 31, 2024 12:00 AM

ADDED : அக் 31, 2024 11:16 AM

Google News

UPDATED : அக் 31, 2024 12:00 AM ADDED : அக் 31, 2024 11:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கீழ்ப்பாக்கம்:
கடலுார் மாவட்டம், நெய்வேலியைச் சேர்ந்த ஜேக்கப் என்பவரின் மகன் ஆலன் கிரைசோ, 21. இவர், சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரியில், எம்.பி.பி.எஸ்., மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார்.

கடந்த, 24ம் தேதி கல்லுாரி விடுதியில் ஆலனிடம் ஐந்தாம் ஆண்டு மாணவர்களான கவின், 24, தியானேஷ், 24, ஆகியோர் தகராறில் ஈடுபட்டனர். அப்போது, பீர் பாட்டிலால் தாக்கியதில், ஆலனின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இது குறித்து, மருத்துவமனை முதல்வர் தலைமையிலான ஐந்து பேர் குழு விசாரித்து, கவின், தியானேஷ் ஆகியோரை, மருத்துவ கல்லுாரி நிர்வாகம், 'சஸ்பெண்ட்' செய்ததாக தெரிகிறது.

இந்த நிலையில், ஆலனின் தந்தை அளித்த புகாரின்படி விசாரணை மேற்கொண்ட கீழ்ப்பாக்கம் போலீசார், கவின் மற்றும் தியானேஷ் மீது, நான்கு பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us