அஞ்சல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: 47 பேர் வரவில்லை
அஞ்சல் பணிக்கு சான்றிதழ் சரிபார்ப்பு: 47 பேர் வரவில்லை
UPDATED : செப் 09, 2024 12:00 AM
ADDED : செப் 09, 2024 08:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சேலம்:
சேலம் மேற்கு அஞ்சலகத்தில் கிளை அஞ்சல் அதிகாரி, மெயில் டெலிவர், பேக்கர் என, 73 காலி இடத்துக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பம் பெறப்பட்டு, 10ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு நடந்தது.
அப்படி தேர்வு செய்யப்பட்டவர்களின் மாற்றுச்சான்றிதழ், கல்விச்சான்றிதழ் உள்ளிட்ட ஆவணங்கள், கடந்த, 3 வரை சரிபார்க்கப்பட்டன. அதில் பங்கேற்ற, 26 பேரும் தேர்வாகினர். அவர்களுக்கு, 3 நாள் அடிப்படை பயிற்சியை தொடர்ந்து, 15 நாள் பயிற்சி வகுப்பு விரைவில் நடக்க உள்ளது.
இதுகுறித்து மேற்கு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் பார்த்திபன் கூறுகையில், இன்னும், 47 பணியிடங்கள் காலியாகவே உள்ளன. இரண்டாம் பட்டியல் மூலம் விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்பட உள்ளதால் ஆன்லைன் மூலம் அந்த பட்டியல் விரைவில் வெளியிடப்படும், என்றார்.