sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சென்னை தொழில் நுட்ப கல்வி குழுவிற்கு அபராதம்

/

சென்னை தொழில் நுட்ப கல்வி குழுவிற்கு அபராதம்

சென்னை தொழில் நுட்ப கல்வி குழுவிற்கு அபராதம்

சென்னை தொழில் நுட்ப கல்வி குழுவிற்கு அபராதம்


UPDATED : ஜன 25, 2025 12:00 AM

ADDED : ஜன 25, 2025 10:46 AM

Google News

UPDATED : ஜன 25, 2025 12:00 AM ADDED : ஜன 25, 2025 10:46 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் ஆஜராகாததால், சென்னையிலுள்ள தொழில்நுட்ப கல்வி குழுவிற்கு அபராதம் விதிக்கப்பட்டது.

கோவை, அவிநாசி ரோட்டிலுள்ள தனியார் தொழில்நுட்ப கல்லுாரி ஒன்றில் ஆர்த்தீஸ்வரி என்பவர் பணியாற்றி வந்தார். இவருக்கு கல்லுாரி கருணைத்தொகை வழங்க மறுத்ததால், கோவை நிரந்தர மக்கள் நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்தார்.

மனுவை விசாரித்த நீதிமன்றம், சென்னையிலுள்ள தெற்கு பிராந்திய அகில இந்திய தொழில்நுட்ப கல்வி குழு சார்பில், விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியது. கல்வி குழு சார்பில் நேரில் ஆஜராக தவறியதால், 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி நாராயணன் உத்தரவிட்டார்.

அத்தொகையை ஒரு மாதத்திற்குள் ஐகோர்ட் தலைமை நீதிபதி நிவாரண நிதிக்கு செலுத்த உத்தரவிடப்பட்டது.






      Dinamalar
      Follow us