10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது புதுச்சேரி, காரைக்காலில் 8,080 பேர் எழுதினர்
10ம் வகுப்பு பொது தேர்வு துவங்கியது புதுச்சேரி, காரைக்காலில் 8,080 பேர் எழுதினர்
UPDATED : மார் 12, 2026 06:44 PM
ADDED : மார் 12, 2026 06:46 PM

புதுச்சேரி:
தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு நேற்று துவங்கியது.
இத்தேர்வை புதுச்சேரி மற்றும் காரைக்காலில் 174 பள்ளிகளை சேர்ந்த 8,096 பேர் எழுத விண்ணப்பித்திருந்தனர். இவர்களுக்காக, புதுச்சேரியில் 20 மையங்களும், காரைக்காலில் 6 மையங்கள் அமைக்கப்பட்டிருந்தது.
நேற்று நடந்த தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வை புதுச்சேரியில் 7,060 பேரும், காரைக்காலில் 1,020 பேர் என மொத்தம் 7,080 பேர் எழுதினர்.
புதுச்சேரியில் 12 பேரும், காரைக்காலில் 3 பேரும் தேர்வு எழுதவில்லை. புதுச்சேரியில் பிரஞ்சு பாடத் தேர்வில் இருந்து ஒருவருக்கு விலக்கு அளிக்கப்பட்டிருந்தது.
தேர்வு மையங்களுக்குள் மொபைல் உள்ளிட்ட தகவல் தொடர்பு சாதனங்களுக்கு அனுமதிக்கவில்லை. தேர்வு காலை 10:00 மணிக்கு துவங்கியது. மாணவர்களுக்கு 10 நிமிடங்கள் வினாக்களை படித்து பார்க்கவும், 5 நிமிடங்கள் விடைத்தாளில் மாணவர்கள் தங்களது குறிப்புகளை பதிவு செய்து சரிபார்க்க நேரம் ஒதுக்கப்பட்டது.
காலை 10:15 மணிக்கு மாணவர்கள் தேர்வு எழுத துவங்கினர். மதியம் 01:15 மணிக்கு தேர்வு முடிந்தது. தேர்வு மையங்களில் முதன்மை கண்காணிப்பாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், பறக்கும் படையினர் கண்காணிப்பில் ஈடுபட்டனர். தேர்வு அடுத்த மாதம் 6ம் தேதி முடிவடைகிறது.

