பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்
பத்தாம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்யலாம்
UPDATED : ஜூன் 04, 2024 12:00 AM
ADDED : ஜூன் 04, 2024 12:35 PM

சென்னை:
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் தங்களுடைய விடைத்தாள் நகல்களை இன்று பிற்பகல் 3 மணி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்ட செய்தி குறிப்பு:
மார்ச் மாதம் நடைபெற்ற பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் இன்று பிற்பகல் 3 மணி முதல் விடைத்தாள் நகல்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல்-II/மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம். www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் Application for Retotalling / Revaluation என்ற பக்கத்தை கிளிக் செய்து விண்ணப்பப்படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். அதனை பூர்த்தி செய்து இரு நகல்கள் எடுத்து உரிய கட்டணத்துடன் மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்தில் ஜூன் 5 (புதன்கிழமை) பிற்பகல் 3 மணி முதல் ஜூன் 10 (திங்கட்கிழமை) மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும்.
தென்காசி, ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
கட்டண விவரம்:
மறுமதிப்பீடு: பாடம் ஒவ்வொன்றிற்கும் ரூ.505
மறுகூட்டல்-II
மற்ற பாடங்கள் ஒவ்வொன்றிற்கும்- ரூ.205
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.