sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

பஸ் கூரை மீது ஏறி சாகச பயணம் திருத்தணியில் தொடரும் அவலம்

/

பஸ் கூரை மீது ஏறி சாகச பயணம் திருத்தணியில் தொடரும் அவலம்

பஸ் கூரை மீது ஏறி சாகச பயணம் திருத்தணியில் தொடரும் அவலம்

பஸ் கூரை மீது ஏறி சாகச பயணம் திருத்தணியில் தொடரும் அவலம்


UPDATED : அக் 24, 2024 12:00 AM

ADDED : அக் 24, 2024 08:58 AM

Google News

UPDATED : அக் 24, 2024 12:00 AM ADDED : அக் 24, 2024 08:58 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருத்தணி:
திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு ஆகிய மூன்று தாலுகாவில் இருந்து தினமும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ -மாணவியர் திருத்தணியில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் , படிப்பதற்கு அரசு பேருந்தில் வருகின்றனர்.
காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ஆபத்தான நிலையில் பேருந்துகளில் தொங்கிய படி சாகச பயணம் செய்வது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதை கண்டிக்கும் ஓட்டுனர் மற்றும் நடத்துனர்கள் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்துகின்றனர். இதனால் பேருந்து ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் இடையே அடிக்கடி தகராறு நடந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வீரமங்கலம் பகுதியில் இருந்து திருத்தணி நகருக்கு வந்த அரசு பேருந்தை நிறுத்தி, மேள தாளங்களுடன் ஆயுத பூஜை என்ற பெயரில் சில மாணவர்கள் பேருந்தின் கூரை மீது ஏறி செல்பி எடுத்தும், படிக்கட்டில் தொங்கியபடியும் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.

இதனால் ஓட்டுனர் வீரகநல்லுார் பேருந்து நிறுத்தம் அருகே பேருந்தை நிறுத்தினார். மாணவர்கள் பேருந்து கூரையில் இருந்து இறங்க மறுத்து ரகளையில் ஈடுபட்டனர். பேருந்தில் பயணம் செய்த சக பயணியர், மாணவர்களை எச்சரித்தபின் பேருந்துக்குள் ஏறி பயணம் செய்தனர்.

போலீசார் மாணவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர். ஏற்கனவே, கல்லுாரி மாணவர்களை போலீசார் எச்சத்துரித்துள்ளது குறிப்பிடதக்கது.






      Dinamalar
      Follow us