கூட்டுறவு மேலாண் டிப்ளமோ பயிற்சி 29ல் முன்பதிவு துவக்கம்: ஜே.ஆர்., தகவல்
கூட்டுறவு மேலாண் டிப்ளமோ பயிற்சி 29ல் முன்பதிவு துவக்கம்: ஜே.ஆர்., தகவல்
UPDATED : ஏப் 29, 2024 12:00 AM
ADDED : ஏப் 29, 2024 10:42 AM

நாமக்கல்:
கூட்டுறவு மேலாண் நிலையத்தில், முழுநேர கூட்டுறவு மேலாண் டிப்ளமோ பயிற்சிக்கு, வரும், 29 முதல் முன்பதிவு செய்யலாம் என நாமக்கல் மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அருளரசு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்படும், நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தில், 2024 - 25ம் ஆண்டிற்கான முழுநேர கூட்டுறவு மேலாண் டிப்ளமோ பயிற்சி நடந்து வருகிறது.
இந்தாண்டிற்கான, மேலாண் டிப்ளமோ பயிற்சிக்கு வரும், 29 முதல் முன்பதிவு துவங்குகிறது. வரும் செப்.,ல் துவங்கி, ஓராண்டு காலத்திற்கு இரண்டு பருவ முறைகளில் பயிற்சி நடக்கிறது.
பயிற்சிக்கான பாடத்திட்டம் தமிழில் மட்டுமே நடத்தப்படும். பயிற்சிக்கான குறைந்தபட்ச கல்வி தகுதி, பிளஸ் 2 தேர்ச்சி பெற்று, 17 வயது நிறைவடைந்திருக்க வேண்டும். விருப்பமுள்ள, தகுதியானோர் tncuicm.com என்ற இணையதளம் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப தேதி, பயிற்சி கட்டண விபரங்கள் மற்றும் நிபந்தனைகளை இணையதளத்தில் வெளியிடப்படும். விபரங்களுக்கு, நாமக்கல் - சேலம் சாலையில் உள்ள நாமக்கல் கூட்டுறவு மேலாண் நிலையத்தை நேரிலோ அல்லது 04286 -290908, 90808 38008 என்ற தொலைபேசி மற்றும் மொபைல் எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.