sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

சென்னைக்கு விமானத்தில் பறந்த கோவை குழந்தைகள்

/

சென்னைக்கு விமானத்தில் பறந்த கோவை குழந்தைகள்

சென்னைக்கு விமானத்தில் பறந்த கோவை குழந்தைகள்

சென்னைக்கு விமானத்தில் பறந்த கோவை குழந்தைகள்


UPDATED : மார் 29, 2025 12:00 AM

ADDED : மார் 29, 2025 10:16 AM

Google News

UPDATED : மார் 29, 2025 12:00 AM ADDED : மார் 29, 2025 10:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோவை:
பிளைட் ஆப் பேன்டசி எனும் திட்டம் மூலம் ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு, ஏழை குழந்தைகளை விமானத்தில் அழைத்து சென்று வருகிறது.

கோவை ஜெம் மருத்துவமனை மற்றும் கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133, கோவை பென்டா ரவுண்ட் டேபிள் 101, திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116, மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95 சார்பில், 25 ஏழை குழந்தைகள் விமானத்தில் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டனர்.

கோவையிலிருந்து அதிகாலை சென்னைக்கு சென்ற குழந்தைகள், அங்கு சென்னை கோளரங்கம் மற்றும் அக்குவாரியத்தை பார்த்து விட்டு, மீண்டும், விமானத்தில் கோவை வந்தனர்.

ஏரியா தலைவர் ராகுலன் சேகர், மெட்ராஸ் மெட்ரோ ரவுண்ட் டேபிள் 95ன் தலைவர் வருண் ஆனந்த், கோவை ஆக்மி ரவுண்ட் டேபிள் 133ன் தலைவர் சுபாஷ், திருப்பூர் ரவுண்ட் டேபிள் 116ன் தலைவர் பார்த்திபன், கோவை பென்டா ரவுண்ட் டேபிள் 101ன் தலைவர் குணால் மற்றும் பிளைட் ஆப் பேன்டசி திட்டத்தின் கன்வீனர் மோகன்ராஜ் வழிகாட்டிகளாக செயல்பட்டனர்.

ஜெம் மருத்துவமனையில் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் பிரவீன் ராஜ் கூறுகையில், இது போன்ற அன்பின் சிறு வெளிப்பாடுகள், இந்த குழந்தைகளின் வாழ்க்கையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தக்கூடியதாக இருக்கும், என்றார்.






      Dinamalar
      Follow us