அரசு பொதுத் தேர்வில் சாதனை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
அரசு பொதுத் தேர்வில் சாதனை ஆசிரியர்களுக்கு கலெக்டர் பாராட்டு
UPDATED : பிப் 21, 2026 11:57 AM
ADDED : பிப் 21, 2026 11:57 AM

விழுப்புரம்:
கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் நுாறு சதவீம் தேர்ச்சி பெற்ற அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
விழுப்புரம் அரசு மகளிர் மாதிரி மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவிற்கு, கலெக்டர் ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமை தாங்கி, தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை பாராட்டி நற்சான்றிதழ் வழங்கி பேசினார்.
கடந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில் நுாறு சதவீதம் தேர்ச்சி பெற்ற 242 அரசு மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் 30 அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள் என மொத்தம் 272 அரசு பள்ளிகளைச் சேர்ந்த 1,400 பட்டதாரி ஆசிரியர்கள், 951 முதுகலை ஆசிரியர்கள் ஆகியோருக்கு பாராட்டு நற்சான்றுகள் வழங்கப்பட்டது.
சி.இ.ஓ., அறிவழகன், மாவட்ட கல்விஅலுவலர்கள் சேகர், செந்தில்குமார், இளமதி, அருள்,உதயசூரியன், சி.இ.ஓ., நேர்முக உதவியாளர் பெருமாள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

