sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

குரூப் - 4 தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போட்டி தேர்வர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

/

குரூப் - 4 தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போட்டி தேர்வர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

குரூப் - 4 தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போட்டி தேர்வர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்

குரூப் - 4 தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி போட்டி தேர்வர்கள் சங்கம் ஆர்ப்பாட்டம்


UPDATED : ஆக 15, 2025 12:00 AM

ADDED : ஆக 15, 2025 10:32 AM

Google News

UPDATED : ஆக 15, 2025 12:00 AM ADDED : ஆக 15, 2025 10:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
கடந்த மாதம் நடந்த குரூப் - 4 தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

தமிழ்நாடு அனைத்து நிலை தேர்வர்கள் சங்கம் சார்பில், சென்னை ராஜரத்தினம் விளை யாட்டு மைதானம் அருகே இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது.

கடந்த மாதம் 12ல் நடந்த குரூப் - 4 தேர்வை ரத்து செய்ய வேண்டும்; டி.என்.பி.எஸ்.சி., வெளிப்படை தன்மையுடன் தேர்வுகளை நடத்த வேண்டும்; குரூப் - 1, குரூப் - 2 தேர்வுகளை தமிழில் எழுதினால் மட்டுமே, 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி, போட்டித் தேர்வர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இது குறித்து, சங்கத்தின் தலைவர் கலீல் பாஷா கூறியதாவது:



குரூப் - 4 தேர்வின் பாடத்திட்டம், ஆறு முதல் 10ம் வகுப்பு வரையிலான பாடங்களை அடிப்படையாக கொண்டது.

ஆனால், கடந்த மாதம் 12ம் தேதி நடந்த குரூப் - 4 தேர்வில், பிஎச்.டி., மாணவர்களின் பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் கேட்கப்பட்டன. 27 கேள்விகள், பாடத்திட்டத்திற்கு வெளியே இருந்து கேட்கப்பட்டுள்ளன.

எனவே, நடந்து முடிந்த குரூப் - 4 தேர்வை தமிழக அரசு ரத்து செய்து, மீண்டும் தேர்வு நடத்த வேண்டும்.

வெளி மாநிலங்களில், குரூப் - 1 தேர்வின் அதிகபட்ச வயது வரம்பு 49 முதல் 51 ஆக உள்ளது. அதை, தமிழகத்திலும் நடைமுறைப்படுத்த வேண்டும். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்கவில்லை எனில், மதுரை அல்லது திருச்சியில் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us