sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

தமிழகத்தில் டீசல் பேருந்துகள் சிஎன்ஜி-ஆக மாற்றம்: ரூ.66 கோடி ஒப்பந்தம்

/

தமிழகத்தில் டீசல் பேருந்துகள் சிஎன்ஜி-ஆக மாற்றம்: ரூ.66 கோடி ஒப்பந்தம்

தமிழகத்தில் டீசல் பேருந்துகள் சிஎன்ஜி-ஆக மாற்றம்: ரூ.66 கோடி ஒப்பந்தம்

தமிழகத்தில் டீசல் பேருந்துகள் சிஎன்ஜி-ஆக மாற்றம்: ரூ.66 கோடி ஒப்பந்தம்


UPDATED : செப் 24, 2025 08:48 AM

ADDED : செப் 24, 2025 08:54 AM

Google News

UPDATED : செப் 24, 2025 08:48 AM ADDED : செப் 24, 2025 08:54 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
தமிழகத்தில் பசுமைப் போக்குவரத்து இயக்கத்தை முன்னெடுக்கும் முக்கிய முயற்சியாக, டீசல் பேருந்துகளை சிஎன்ஜி எரிபொருளில் இயங்கச் செய்யும் ரூ.66 கோடி மதிப்பிலான பணி ஆணையை ஈக்கோ பியூயல் சிஸ்டம்ஸ் பெற்றுள்ளது.

இந்த திட்டத்தின் கீழ், 850 டீசல் பேருந்துகள் அடுத்த 12 மாதங்களில் சிஎன்ஜி-ஆக மாற்றப்படவுள்ளன. இதன் மூலம் ஆண்டுதோறும் சுமார் 5.7 லட்சம் டன் கார்பண்டை-ஆக்சைடு உமிழ்வு குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. திட்டம் நிறைவேறிய பின், தமிழ்நாடு நிலையான பொதுப் போக்குவரத்தில் தேசிய அளவில் முன்னணி மாநிலங்களில் ஒன்றாக இருக்கும்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் ஈக்கோ பியூயல் சிஸ்டம்ஸ் நிறுவனம் இந்தியாவில் மாற்றியமைத்துள்ள பேருந்துகளின் எண்ணிக்கை 1,500-ஐத் தாண்டும். சான்றளிக்கப்பட்ட சிஎன்ஜி மாற்று கருவிகள், உயர் பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் சிறந்த எரிபொருள் செயல்திறனைக் கொண்டுள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஈக்கோ பியூயல் சிஸ்டம்ஸ் நிறுவனர் மற்றும் தலைவர் வீரேந்திர வோரா கூறுகையில், “தமிழ்நாடு எடுத்த இந்த முடிவு, சுத்தமான போக்குவரத்தில் மாநிலத்தின் முற்போக்கான தலைமைத்துவத்தை காட்டுகிறது. இது வணிக வெற்றியைத் தாண்டி, நிலையான கண்டுபிடிப்புகளுக்கான எங்கள் உறுதிப்பாட்டின் சான்றாகும்” என்றார்.

இம்முயற்சி இந்தியாவின் 2030க்குள் பொதுப் போக்குவரத்தைக் குறைந்த உமிழ்வு மாற்றுகளாக மாற்றும் தேசிய பசுமை இயக்க இலக்குடன் இணைந்து செயல்படுகிறது. மின்சாரப் பேருந்துகளின் அதிக முதலீட்டைத் தவிர்த்து, செலவு குறைந்த மற்றும் விரைவில் செயல்படுத்தக்கூடிய தீர்வாக சிஎன்ஜி மாற்றம் கருதப்படுகிறது.






      Dinamalar
      Follow us