sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

கல்விமலர்

/

செய்திகள்

/

மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை: 3 மடங்கு அதிகரிப்பு

/

மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை: 3 மடங்கு அதிகரிப்பு

மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை: 3 மடங்கு அதிகரிப்பு

மாநகராட்சி பள்ளி மாணவர் சேர்க்கை: 3 மடங்கு அதிகரிப்பு


UPDATED : ஜூலை 30, 2025 12:00 AM

ADDED : ஜூலை 30, 2025 09:18 AM

Google News

UPDATED : ஜூலை 30, 2025 12:00 AM ADDED : ஜூலை 30, 2025 09:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை:
சென்னை மாநகராட்சி பள்ளிகளில், மாணவ - மாணவியர் சேர்க்கை, மூன்று மடங்கு அதிகரித்துள்ளது.

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் உள்ள, 417 பள்ளிகளின் செயல்பாடு மற்றும் வளர்ச்சி பணிகள் குறித்த ஆய்வு கூட்டம், மேயர் பிரியா தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்தில், 2025 - 26 கல்வியாண்டில் மாணவ - மாணவியர் சேர்க்கை குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை மாநகராட்சி பள்ளிகளில், இந்தாண்டு புதிதாக, 22,870 மாணவ - மாணவியர் சேர்ந்துள்ளனர். கடந்தாண்டு, 6,000 மாணவ - மாணவியர் சேர்க்கை நடந்த நிலையில், இந்தாண்டு மூன்று மடங்கு மாணவர் சேர்க்கை அதிகரித்து உள்ளதாக ஆய்வு கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

மேலும், தேர்ச்சி விகிதம், தேர்ச்சி குறைவான பள்ளிகளில் உள்ள பிரச்னைகள், உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசிக்கப்பட்டன. கூட்டத்தில் துணை மேயர் மகேஷ்குமார், கமிஷனர் குமரகுருபரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us